ம்ம்ம்ம்ம்மா...........


செல்லம் எனக்கு இங்கே பீல் பண்றமாதிரி ஒரு முத்தம் வேணும்! ஒன்னே ஒன்னு கொடேன்?

நான் மாட்டேன்!

ப்ளீஸ்! ப்ளீஸ்! என் கன்னம் எல்லாம் நீ இல்லாம வறண்டுபோய் கிடக்குது, ப்ளீஸ் ஒன்னே ஒன்னு

ம்மா

பீலே வரலையே?

ம்ம்ம்மா

ம்ஹூம் பத்தலை

ம்ம்மா.. ம்ம்மா..


சேலையை கசக்குவது இன்னும் அழகு!

அவள் : உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும்? நான் அதை நாளைக்கி கட்டிக்கிட்டு வர்றேன்.

அவன் : எனக்கு கலரே இல்லாம சாரி கட்டினாதான் பிடிக்கும்.

அவள் : ச்சீ நாயே! நீ ரொம்ப மோசம்.




அவள் : எனக்கு தம் அடிச்சா பிடிக்காது

அவன் : எனக்கும்தான் பிடிக்காது

அவள் : அப்புறம் ஏன் நீ தம் அடிக்கிற?

அவன் : நான் சொன்னது மத்தவங்க தம் அடிச்சா பிடிக்காது.





அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

  உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே!  இன்று நேற்றல்ல எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்போதும் பயன்படும்! இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள், ஆராய்ச்சிகள் வழியாகவும் தமிழ் அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.

  திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய இரயில்களிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர் திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள். தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

  படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான்!

  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி

  விளக்கம்: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில்என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.


என் முழுதும் நீ என்கிறேன்; பாதி என்கின்றாயே நீ? - காதல் மொழி 3



முற்றும் இல்லை முதலும் இல்லை எனும் பட்சத்தில் எங்கிருந்து நான் தொடங்க?

முற்றும் இல்லாதவரை எங்குவேண்டுமானாலும் தொடங்கலாம், முதலாய் நானிருக்கும்வரை!

"கதியே நீயென்று சரணம் ஏய்தினேன்" :-)

என் ஆதியும் நீதான், என்னில் பாதியும் நீதானென்று என்னுள் கலக்கவிட்டேன்!

இருவரும் ஒருவரெனக் கலந்தபின் இனி ஒரு பிரிவேது; எனதுயிர் கொஞ்சம் துயில் கொள்ளட்டும் உன்னுள்.

தூக்கம் கலைந்ததோ? அல்லது நான்தான் கலைத்துவிட்டேனோ?

உன்னுள் உறங்கையில் விழித்துக் கொண்ட என் கனவு கலையுமோ உன்னால்? :-)

என்னுள் எதற்கு கனவு காண்கிறாய்? நனவைக் காண்போமே இருவரும்?

நிஜங்கள் இரண்டு காணட்டுமே விழா காணும் கனா ஒன்று :-)

திருவிழா காணும் காலமாய் மாறட்டும்! :)


உன்னில் உறைந்துபோனேன் நான்! - காதல் மொழி 2


தட்டுப்பட்டது நானெனில் அச்சம் தவீர்; பத்திரமாய் இருக்கு உன் மனது என் உயிர்கூட்டிற்குள்!

அச்சம் என்றெல்லாம் ஒன்றுமில்லை; மிச்சமாய் என்னுள் ஏதும் இல்லை; உன்னைத்தவிர!



நிலாப்பெண்ணின் மொத்தமும் நானானேன்! எந்தன் சித்தம் முழுதும் நீயானாய்!


எப்படி என்னுள் நுழைந்தாயோ அப்படியே என்னுள் நிறைந்தாய்! 



வார்த்தைக்குள் என் அன்பு அடங்கிவிடும் எனில் வானம் மூன்றெழுத்தில் முடிந்து விடும்.


உன் அன்பு கண்டு உறைந்துபோய் நிற்கிறேன் - வார்த்தைகளின்றி!



வார்த்தையில் என்ன இருக்குஉன் பார்வையில் மொத்தம் அன்பும் வழிந்திடும் போது!


உன்னில் உறைந்துபோனேன் நான்! பிறகு வார்த்தையெங்கே? பார்வையெங்கே?