இதை வாசி என்று எழுதினால் வெறுமனே
வாசித்துவிட்டுப் போய்விடுவீர்கள் என்றுதான், விலைவேசி என்றால் இரண்டு, மூன்று முறை
மேலும், கீழும் படிப்பீர்கள் என்று தெரியும்!
கண்டி பேருந்து நிலையத்திலிருந்து பின்னிவெல
யானைகள் காப்பகம் செல்லும்போது (கொழும்பு பேருந்து), இந்த பின்னிவெல என்ற பெயரை
சிங்களத்தில் உச்சரித்தால் மட்டும்தான் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புரியும் (தமிழர் தவிர). இந்த பெயரை கண்டுபிடிக்க எனக்கு அரை மணி நேரமானது.
இன்னொரு நல்ல
விஷயம் என்னவென்றால் இலங்கையில் 95 சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள்
ஏதாவது சொன்னாலும் புரியாது. ஊர் பெயரைக்கூட சிங்கள உச்சரிப்பில் சொன்னால்தான்
புரியும். உங்களது இடம் வந்தால் கண்டக்டர்ரே வந்து உங்களை இறக்கி விட்டுவிடுவார். உங்கள் மேலுள்ள பாசத்தினால் அல்ல, இன்னும் இருந்தால் ஆங்கிலத்தில் பேசி கொலை
செய்வான் என்றுதான். சரி கதைக்கு வருவம்!
பேருந்து கிளம்பி வெளியேவரும் சமயம் ஒரு பெண்
ஏறினார், என் அருகே வந்து அமர்ந்தார். (பொண்ணுனாதான் நீ ஈஈனு பல்ல
காட்டிருப்பியே!). வேறு எங்கும் இருக்கை காலி இல்லை. ஏதோ என்னிடம் அராபிக்கில் கேட்டார், பின்புதான்
அது சிங்களமென்று தெரியும்.
“ஐ டோன்ட் நோ சிங்களா!” என்றேன்.
“இந்த பஸ் கொழும்புதானே போகிறது?” என்றார். எப்புடிதேன் கண்டுபிடிக்கிராங்கனே தெரிய
மாட்டேங்குது, நாம் தமிழர் என்று! டேய் கேமரா எதாச்சும் வச்சு பார்க்குறீங்களா?
ஸ்ஸ்ஸ்ஸ்!
(இன்னொரு முக்கியாமான விஷயம் தமிழன் எங்கு
போனாலும் மத்த மொழிகளை கற்றுக்கொள்ள மாட்டான் அல்லது கற்றுக்கொள்ள
விரும்பமாட்டான்! இந்தியா, துபாய், அரபிய நாடுகளில் இந்தி பேசாத ஒரு இந்தியன்
என்றால் அது தமிழன்தான் (நானுந்தேன்). இலங்கையில் சிங்களம் பேசவில்லை என்றால் அது
தமிழன். மலேசியா, சிங்கப்பூரில் மலாய் பேசவில்லை என்றால் அது தமிழன். த்தமிழேண்டா!)