இறுதிப்போரும் கருணாநிதியும்!

  ஈழப் போரை இலங்கையும், இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். 

  எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. 

  மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன என நாம் கதறியபோதெல்லாம், அவர் சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள் என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார். அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.


அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.



எழும் மாணவர் சக்தி - மனதைத் திற!

  மாணவர்கள் என்றால் நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்வார்கள், பஸ்டே என்ற பெயரில் கலவரம் நடக்கும், பக்கத்துக் கல்லூரியில்போய் கலவரம் செய்வார்கள், எதிர்காலத்தை பற்றிய எந்த தெளிவும் இருக்காது என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

  இந்தித் தடுப்புப் போராட்டம் வெற்றிபெற ஒரே காரணம் மாணவர்கள் மட்டும்தான் என்பதை யாருமே மறுக்க இயலாது. ஆனால் இலங்கை இறுதிப்போரின்போது தொடங்கிய மாணவர் போராட்டம் அப்போதைய அரசால் தடுக்கப்பட்டுவிட்டது. சகோதர்கள் கொத்துக்கொத்தாய்ச் சாகும்போது தாய்த் தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது என்ற குற்ற உணர்ச்சி பல நாட்களாய் இருந்தது. தமிழ் இளைய சமுதாயம் வெறும் கேளிக்கைகளில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பல நாட்களாகவே இருந்தது.

  ஆனால் இப்போது மாணவர்கள் தொடர்ச்சியாய் இலங்கைப் பிரச்னைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி, இனம், மதம், சாதி சார்பின்றி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் "மாணவர் சக்தி" என்ற ஒரே ஆயுதத்துடன் போராடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ரத்தம் தமிழரின் ரத்தம் என ஒவ்வொரு மாணவரும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தலைவனில்லை, கட்சியில்லை ஆனால் லட்சியம் மட்டும் கொண்டு தவறென்றால் ஒன்றாய்க்கூடி அதை எதிர்க்கும் மாணவர்கள் நம் சமுதாயத்தில் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சிலம்பரசன்.

தொடங்கிய போராட்டம்:

  சென்னை லயோலா கல்லூரில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாளான 11/03/13 அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுதும் பற்றிக்கொண்டது.


  இன்று போராட்டம் நடத்தாத மாவட்டங்களே இல்லை என்னும் அளவுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஏன் பண்டிச்சேரியிலும்கூட மாணவர் போராட்டத்தால் அதிர்ந்துவருகிறது.


பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

 மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.

 சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் (தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
 கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)


பொங்கல் என்றால் என்ன?

தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை மூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.

3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்


சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

  சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, பிறருக்கு பாதிப்பில்லாத வகையில் எதையும் செய்யலாம் என்பதே!

பெரும்பாலான தவறுகள் நிகழ பயமின்மையே காரணம்! 


இஸ்லாமிய சட்டம் என்றில்லை, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், லஞ்சங்கள் ஒழிக்கப்பட வேண்டும், நீதித்துறை உடனே நீதி வழங்கவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!


பிணத்தை எரித்துவிடுங்கள், அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

  இந்தியாவில் ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது. 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்.

காட்சி 1 : மும்பை, மே-மாதம்.

  14 வயதுச்சிறுமியை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த 5 பேர் கடத்தக் கொண்டுபோய் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு சுமார் ஐந்து மாதங்களாகக் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு மாதம் ஆனவுடன் அவள்மீதிருந்த ஆசை தீர்ந்துபோய் “சோறு யார் போடுவதென்ற சண்டை வந்திருக்கின்றது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெறும் ஒரே ஒரு வடா பாவ் கொடுத்திருக்கின்றனர்.

  ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பூங்காவில் வீசிவிட்டனர். அவளை ஆபரேசன் செய்தபோது உடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்னென்ன தெரியுமா? பேப்பர், மண், கற்கள் (பசியினால் வேறுவழியில்லாமல் அதையும் தின்றிருக்கும் அந்த சிறுமியைப் பற்றி நினைத்துக்கூட நம்மால் பார்க்க இயலவில்லை). கடந்த நவம்பர் 14 உடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள.


தமிழ் தத்துவங்கள்


  • தமிழ் எண்முறையிலிருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் ஒன்று(ஊ), இரண்டு(ஊ), மூன்று(ஊ) பத்து(ஊ) நூறு(ஊ), எண்ணூறு(ஊ) (1-899 வரை)

  • குழந்தைகளுக்கு அன்னா சொல்லித்தான் தமிழ் மொழி கற்றுத்தருகிறோம் இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா..

  • தமிழ் எழுத்துகளில் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

இதெல்லாம் தெரிந்துதான் பாரதி அன்றே சொன்னார் - "தமிழ் இனி மெல்லச் சாகும்"
ஆனா அதுக்கு அவரையே ஊறுகாயாக்கனுமா?        (படம் நன்றி - ) 


தூரத்துத் தெருநாய்கள்!

  இரவிலும் அகோரமாய் ஒலிக்கிறது எங்கோ தூரத்திலிருக்கும் வெறிப்பிடித்த தெருநாய்களின் சப்தம். அந்தச் சப்தம் காதினுள் படும்போதே குலையெல்லாம் நடுங்கும், கைகள் உதறும். சுவற்றோரமாய் ஒண்டிக்கொள்கிறேன் நான்.

  தனக்குப் பசி என்றால் யாரையும் கடிக்கும். தன் குடும்பத்திற்கு பசி என்றால் ஊரையே கொளுத்தும். தன் இச்சைக்குத் தன்னைத்தானே கற்பழித்துக்கொள்ளும். ஊரில் இருந்த எல்லோரையும் கடித்து வெறியேற்றிச் சாகடித்ததோடல்லாமல் அருகில் மிச்சமிருப்போரையும் தேடி அலைகின்றன.

  இந்த நாய்களிடமிருந்து தப்பித்து எப்படியோ ஊர் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் இன்னும் என் காதுகளில் அதன் கொக்கரிப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரத்தம் சொட்டும் அதன் கோரப்பற்களின் வெறித்தனம் இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை.




சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும் 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்


2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

  இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். 
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்துதமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள்இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும்தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்குஇது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம்வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம்உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.





அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை

  என் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற்றத்தின் பழைய புகைப்படங்கள் மன்னிக்கவும் பொக்கிஷங்கள். படங்களின் மீது கிளிக் செய்து பெரிதாய்ப் பார்க்கலாம்.
திருக்குறள் ஓலைச்சுவடி - Tirukkural photo
காமராஜர், ஜெயலலிதா மற்றும் பலர் - Kamraj & Jayalalitha

கோயம்பத்தூர் ரயில்வே - Coimbatore railway 1903


ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

  இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?

  ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது. 

  ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)   


திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:

  முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது. 

  ஜப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009)

தமிழ் - ஜப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

  பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச்  ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

  "ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.

  ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.


  1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.


மனிதன் அழிந்துவிடுவானா? எல்லா நாகரீகங்களும் அழிந்துபோகக் காரணமென்ன?

இந்தக்கேள்விக்கான விடை, கீழுள்ள கதையைப் படியுங்கள் புரியும்!

ஈஸ்டர் தீவின் மர்மங்கள்:

   ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.



  இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.


11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு

  பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.


  சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.


ஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்!






ஒரு கொடி
ஒரு மிட்டாய்
ஒரு சுதந்திர தினம்!





அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.




  இந்தியர்கள் போன்ற பொருமைசாளிகளை உலகமே கண்டிருக்காது. கடந்த 66 வருடங்களாக பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் என எல்லோரது சுதந்திர உரையும் இதேதான்!! இவ்வளவு வருடங்களாகியும் இதில் ஒருகூட நிறைவேற்றப்படவில்லையே ஏன்? இதையே திரும்பத் திரும்பக் கேட்டும் நமக்கும் சலிக்கவில்லை, அப்போ நாம்தானே உலகின் சிறந்த பொறுமைசாலிகள்?

  அடுத்த வருட சுதந்திர தினத்தில்கூட இதுதான் உரை (சந்தேகமிருந்தால் சரிபார்க்கவும்.

  • நாட்டிற்கு அச்சுறுத்தலான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்! 

  • வறுமையை ஒழிப்போம், நாடெங்கும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும்.  

  • லஞ்சத்தை ஒழிப்போம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்போம்!


  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னுரிமை. சரியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை.


  • நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதமாக உயர்த்துவோம்! உற்பத்தித் துறை ஊக்குவிக்கப்படும்.

  • 100% கல்வியறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும். பெண்கள் கல்வியறிவு ஊக்குவிற்கப்படும்.

  • பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகை செய்யும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.

  • மின்சாரம், உற்பத்தி ஆகியவற்றில் தன்னிறைவு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

  • உணவு பொருள்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை. எளிய விவசாயக்கடன்கள் மூலம் விவசாயம் ஊக்குவிக்கப்படும்

  • புதிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒற்றுமையாய் செயல்படுவோம்!