மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை
ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை
இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத்
திருநாளாக இருப்பதே சாட்சி.
சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்
உண்டு.
பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்
பொங்கலுக்கெல்லாம்
மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும்.
சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள்
தைநீராடல் (தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக்
குறிப்பிடுகின்றன.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும், மாணிக்க
வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)
பொங்கல் என்றால் என்ன?
தைப் பொங்கல் என்பது
நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத்
தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை
மூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு
நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும்
நாள்.
3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும்,
பறவைகளுக்கும் வழங்கப்படும்