தலைவா - திரை விமர்சனம்.

  ஓட்டையான ரோடுகளைச் சரிசெய்ய வக்கில்லை, போகிற கரண்டை சரி செய்ய தெம்பில்லை, இலவசம் கொடுத்தே ஏமாற்றி வரும் அரசாங்கங்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எண்ணிப்பார்க்கக்கூட நேரமில்லை ஆனால் ஏதாவது சினிமாவை ரிலீஸ் ஆகாமல் முடக்குவதென்றால் அப்படியொரு ஆனந்தம். முதலில் காவலன், விஸ்வரூபம் இப்போது தலைவா.

  இந்தப்படத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாதாம். பிறகு எதற்கு அரசாங்கம் நடத்த வேண்டும், ரிசைன் செய்துவிட வேண்டியதுதானே? ஒரு படத்தைக்கூட வெளியிட எங்களுக்கு வக்கில்லை அதனால் ரிசைன் செய்கிறோம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?

  அரசாங்கம் தடை செய்யும் அளவுக்கு துளிகூட அரசியலோ, அரசியல் வசனங்களோ இல்லை. சத்தியராஜ் கேரக்டர் பெயர் அண்ணா. ஒருவேளை இதற்குத்தான் தடையோ என்ன எழவோ!




தத்துவங்கள் தன்னம்பிக்கை வாழ்க்கை!


  • அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை!

  • பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர எல்லா ஆண்களும் போய்விட வேண்டும் :-)
  
  • வீடு சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலும் பராவாயில்லை, மைக்செட் வைத்து ஆசிர்வதிக்கப்படும் இடத்திற்குப் பக்கத்தில் வேண்டாம்!

  • ஊருக்குள்ள எதைப்பார்த்தாலும் போட்டோ எடுத்து ஸ்டேடஸ் போட்டுர்றானுக. நம்பி உச்சா போக முடியல! சே!

  • குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலும் இருந்து ஒரு பிறந்தநாளை அதிகப்படுத்துங்கள்!


சர் ரவீந்தர ஜடேஜா – SIR RAVINDRA JADEJA


  • சர் ரவீந்தர் ஜடேஜா பேட்டிங் பண்ணும்போது ஸ்டைன் வீசின பந்து பேட்டில படாம அவரு உடம்பில பட்டுடுச்சு. அப்புறம் எங்க தேடியும் அந்த பந்தைக் காணவே இல்லை. பேட்டில பட்டிருந்தாகூட சிக்ஸ்ஸோட போயிருக்கும், சர் உடம்பில பட்டது கிடைக்குமா?


  • சென்னைல நடந்த சென்னை சூப்பர்கிங்க்ஸ் VS பெங்களூர் மேட்ச் முடிஞ்சுட்டு மும்பையோட விளையாட மும்பைக்கு பிளைட்ல போயிட்டிருந்தாங்க. அப்போ டமால்னு ஒரு சத்தம். என்னடான்னு பார்த்தா கிரிக்கெட்பால் விமான இறக்கைல விழுந்திருக்கு. சர் மேட்ச்ல அடிச்ச சிக்ஸர்ல மேலே போன பால் இப்பத்தான் திரும்பியிருக்கு.


ரசித்த தெலுங்கு படங்கள் 1

ஆர்யா–2 (AARYA 2)

  ஒவ்வொரு சீனும் ரசிச்சு ரசிச்சு பார்த்த படம்னா அது இதான்! நம்ம எப்படி வீட்டுல நல்லவன் வேஷமும் உண்மைல தெள்ளவாரியாவும் நடிக்கிறோம்? அதை அப்படியே காட்டுவதுதான் இந்தப்படம். தெரியாம தம்மடிப்போம், தம்மடிச்சுட்டு வாயில ஸ்பிரே பண்றது, டாய்லட்ல சரக்கடிக்கிறது செம செம.



  அல்லு அர்ஜுன் நடிப்பு சான்ஸே இல்லை. இசை, டான்ஸ், பாட்டு என எல்லாமே ஒருசேர அருமை. காஜல் அகர்வால்கூட லிப்ட்ல லிப்ல கிஸ் சீன் இருக்குப்பா :-)

              


தொப்பி தொப்பி


  எப்படி பேசினாலும் கேட் போடுறானுக சிலர். இவிங்ககிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி மான் கராத்தேதான் பிறவு என்ன செய்ய? ஏலே இது சரிதானேனேனு கதைய படிச்சிட்டு சொல்லுவினம்.


  It happened at a New York Airport. This is hilarious. I wish I had the guts of this girl. An award should go to the United Airlines gate agent in New York for being smart and funny, while making her point, when confronted with a passenger who probably deserved to fly as cargo. For all of you out there who have had to deal with an irate customer, this one is for you.

A crowded United Airlines flight was canceled. A single agent was re-booking a long line of inconvenienced travelers.


சேட்டை – டரியல் சினிமா விமர்சனம்.

ஆர்ர்ர்யா – யாருயா இந்தாளு? பிங்க் சொக்காய போட்டுகினு கடசி அஞ்சு படத்திலேயும் அதே பாட்டுக்கு அதே டான்ஸ் ஆடிகினு இருக்காரு?

அஞ்சலி : மாடர்ன் டிரெஸ்ஸ போட்டுகினு வந்தா- ப்பா! யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி?

ஹன்சிகா! – டிரெஸ்ஸையும் தொப்பையயும் குறைச்சா மட்டும் பத்தாது, கொஞ்சமாச்சும் நடிக்கனும் கண்ணு. நைனா இந்த பொண்ணு பேசும்போதெல்லாம் எதோ பஞ்சாபி டப்பிங்க் படத்துக்கு வந்தமாதிரியே பீலிங்.

டைரு டக்டர்ர்ர்ரு : ஏப்பா கதைய செலக்ட் பண்ணும்போதே எதுக்கு பண்றோம்னு யோசிக்க வேணாமா? ஹிந்தில டெல்லி பெல்லி ஓடினதே பிட்டுக்காகவும், டபுள் மீனிங்குக்காவும் மட்டும்தான். தமிழ்ல ஒன்னும் இல்லாததற்கே படத்திக்கு சென்சார் கொடுக்க மாட்டனுவள். பின்னே பிட்டை எல்லாம் நீக்கிட்டு எடுத்தா? (ஏமாந்தது நானு). ஹிந்தி படத்தின் மிகப்பெரிய பிளஸ் “கருமி ராஜா, ஐ ஹேட் யூ” பாடல்கள். அதுவும் படத்தில் இல்லை.

படம் பார்த்த ஒரு ஹிந்திவாலா

மூஜிக் – : ட்ரெயின்குள்ளே உக்காந்துகினு பழைய ரேடியோ பொட்டில பாட்டு கேட்கற மாதிரியே ஒரு பீலிங்க். எல்லா பக்கத்திலிருந்தும் சொஈஈஈஈநனு ஒரு சவுண்டு. 40 நிமிஷம் அவ்வ்வ்!


கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?

  2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.

கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.

ஐந்து ரூபாய்

ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.


நம்பர் 1 முட்டாள் யார்?

 நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.


  ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.


கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa Killadi Ranga)

  OKOK படத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். விமல், சிவகார்த்திகேயன் நடிப்பு மனதில் ஒன்றவில்லை. சிலசமயம் "அது இது எது" செட்டுக்குள் இருப்பதுபோலவே ஒரு பீலிங். இவர்கள் சீரியஸான சண்டை போடுவதுகூட நமக்கு காமெடியாகவே இருக்கின்றது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களிலாவது கொஞ்சம் கதையுள்ள, நடிக்க வாய்ப்புள்ள படங்களைத் தேர்வு செய்வது நல்லது. இல்லையென்றால் விமல் நிலைமைதான் அவருக்கும்.

  படத்திற்கு போகும்முன்னரே சொன்னேன் "பரோட்டா சூரியின் நடிப்பு நல்லா இருக்குமென்று". நடந்ததும் அதுவேதான். வடிவேல் இல்லாத இந்த தருணத்தில் ஒரு கிராமத்து வெள்ளந்தியான காமெடி வைப்பதற்கு சூரிதான் மிகச்சிறந்த ஒரே சாய்ஸ்.



கிரிஸ் கெயிலாக மாறிய ஜெ! அத்தனையும் சிக்ஸர்!


பந்து கமெண்டரி:

  "இலங்கையில் இறுதிப்போரின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், இலங்கையின் நடுவர்கள், களப் பணியாளர்கள் என யாரும் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

எடுக்கப்பட்ட ரன்கள்:

  1. IPL தொடங்கும் இந்த சமயத்தில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை. ஜெ. என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதே போல IPL நிர்வாகம் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என ஒத்துக்கொண்டது. நமக்கு பணந்தான் முக்கியம்! நாய் வித்தகாசு குரைக்கவா போகுது?

  2. சென்னை அணி இரண்டு இலங்கை வீரர்களைப் மொத்த தொடருக்கும் புறக்கணித்தது எதிர்பார்த்ததுதான். அதனால் பெரிய இழப்பில்லை. ஆனால் அணிக்கு ரசிகர் ஆதரவு முக்கியந்தானே? சீனிவாசன் வாயாலயே சீனி விக்கிற ஆளாச்சே?


புல்லரிக்க வைத்த விளம்பரங்கள்!





  விளம்பரம் என்றால் எதோ அந்தகாலத்து தூர்தர்சன் விளம்பரங்களைப் பார்த்து வியந்துகொண்டிருந்த??? (எப்படா முடியும்னு) இப்பொழுதெல்லாம் எப்பொழுது விளம்பரம் வருமென்று தேட ஆரம்பித்து விடுகின்றோம்! கார்பரேட் உலகில் போட்டிகளினால் வந்த நன்மை இதுமட்டும்தான்!


                     



                       


தமிழக பட்ஜெட்டும் எங்க வீட்டு மாட்டுகன்னும்!

  நேற்று சட்டசபையில் தொடங்கிய தமிழக பட்ஜெட்டில் ""அம்மா அம்மா, அம்மா அம்மா" என்று தொடங்கிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையிடையே மானே தேனே என, புரட்சித்தலைவி, ஒப்பற்ற தலைவி, தானைத் தலைவி, வீரத்தமிழ் வடிவம், நம்பிக்கை நட்சத்திரம், பாரத்த்தாயின் தவப்புதல்வி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா என "அம்மா அம்மா பட்ஜெட்" வாசித்தார்.

  இவையெல்லாம் வாசித்து திரும்ப புகழ்வதற்கு வார்த்தை இல்லாதபோது அதுக்கு பத்து கோடி, இதுக்கு நூறு கோடி என அறிவித்தார். பிறகு திரும்பவும் அம்மா அம்மா என முடித்துக்கொண்டார்.


இது எங்க வீட்டில:

"சும்மா கத்துதுபாரு! போய் மாட்டுக்கு தண்ணி வையி போ!" என்றாள் அம்மா.

"அம்மா, இங்கில்லம்மா, டி.வில ஏதோ பட்ஜெட் வாசிக்கிறாங்கலாமா!!"


இறுதிப்போரும் கருணாநிதியும்!

  ஈழப் போரை இலங்கையும், இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். 

  எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. 

  மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன என நாம் கதறியபோதெல்லாம், அவர் சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள் என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார். அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.


அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.



எப்பத்தான் முடியும் இந்த இலங்கை நாடகம்?

  2009 மட்டுமல்ல 2013லும் நாடகம் போடவேண்டுமென்றால் அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சினையை எடுத்துக்கொள்கிறார்கள். 


  கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார்.

  அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார்.


எழும் மாணவர் சக்தி - மனதைத் திற!

  மாணவர்கள் என்றால் நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்வார்கள், பஸ்டே என்ற பெயரில் கலவரம் நடக்கும், பக்கத்துக் கல்லூரியில்போய் கலவரம் செய்வார்கள், எதிர்காலத்தை பற்றிய எந்த தெளிவும் இருக்காது என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

  இந்தித் தடுப்புப் போராட்டம் வெற்றிபெற ஒரே காரணம் மாணவர்கள் மட்டும்தான் என்பதை யாருமே மறுக்க இயலாது. ஆனால் இலங்கை இறுதிப்போரின்போது தொடங்கிய மாணவர் போராட்டம் அப்போதைய அரசால் தடுக்கப்பட்டுவிட்டது. சகோதர்கள் கொத்துக்கொத்தாய்ச் சாகும்போது தாய்த் தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது என்ற குற்ற உணர்ச்சி பல நாட்களாய் இருந்தது. தமிழ் இளைய சமுதாயம் வெறும் கேளிக்கைகளில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பல நாட்களாகவே இருந்தது.

  ஆனால் இப்போது மாணவர்கள் தொடர்ச்சியாய் இலங்கைப் பிரச்னைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி, இனம், மதம், சாதி சார்பின்றி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் "மாணவர் சக்தி" என்ற ஒரே ஆயுதத்துடன் போராடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ரத்தம் தமிழரின் ரத்தம் என ஒவ்வொரு மாணவரும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தலைவனில்லை, கட்சியில்லை ஆனால் லட்சியம் மட்டும் கொண்டு தவறென்றால் ஒன்றாய்க்கூடி அதை எதிர்க்கும் மாணவர்கள் நம் சமுதாயத்தில் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சிலம்பரசன்.

தொடங்கிய போராட்டம்:

  சென்னை லயோலா கல்லூரில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாளான 11/03/13 அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுதும் பற்றிக்கொண்டது.


  இன்று போராட்டம் நடத்தாத மாவட்டங்களே இல்லை என்னும் அளவுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஏன் பண்டிச்சேரியிலும்கூட மாணவர் போராட்டத்தால் அதிர்ந்துவருகிறது.


ஃப்ரீ ஃபிளைட் டிக்கெட் வேணுமா? போலீசைக் கூப்பிடுங்க!

  53 வயதான பாகிஸ்தானி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் பல நாட்களாக வேலைக்குச் செல்லாததால் நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. வேலையிழந்து வேறு வேலைக்கு முயற்சித்து வேலை எதுவும் கிடைக்கவில்லை. விசாவும் முடிந்துவிட்டதால் துபாயில் தங்கியிருப்பது சட்டவிரோதம். பாகிஸ்தானுக்குத் திரும்பிப்போக பிளைட் டிக்கெட் வாங்கணுமே? கையில் மட்டுமல்ல பையிலும் பணமில்லை. என்ன செய்யலாம் என உட்கார்ந்து யோசித்த அவருக்கு கனநேரத்தில் வந்ததது ஒரு யோசனை.

  ஜனவரி 20ம் தேதியன்று அவசர உதவி எண்ணான 999ல் போலீஸ் கண்ட்ரோல் ரூமை தொடர்புகொண்டு என்னை நாடு கடத்தவேண்டும்(Deport) எனத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஒருமுறையல்ல, இருமுறையல்ல 100 தடவை தொடர்ந்து கூப்பிட்டிருக்கிறார்.


இரண்டாம் வகுப்பு பையன் படிக்காததற்கு கிடைத்ததோ 11 லட்சம்!

  துபாயில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக படிக்கவில்லை, அவனது கல்வியை ஊக்குவிக்க பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவனின் தந்தை. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவன் கல்வியை மேம்படுத்தத் தவறியதற்காக Dhs 77,500 (ரூ.11 லட்சம்) செலுத்த அந்தப் பள்ளிக்கு உத்தரவிட்டது.

  மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.


அம்மா பிரதமர் ஆனால்!


  • ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும். சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும்.

  • பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே 273 எம்.பிக்கள் குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?

  • ஒரு எம்.பி கூட லஞ்சம் வாங்க முடியாது. ஏன்னா அவரு அன்னிக்கி பதவில இருக்காரா? இல்லையானு ஆண்டவனுக்கு கூட தெரியாது, ஆண்டவனே 8 மணி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவாராம்.

  • குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.

  • அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும், அத்துனை அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.

  • ஒல்லியாய் இருப்போர்மீதும் குண்டர் சட்டம் பாயும். பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில் மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர் நிலா அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.


சைக்கோ தொடர்கதை பகுதி 3

   தலையெல்லாம் ஒரே வலி, எழுந்து பார்த்தால் மணி மதியம் 3. மற்றவர்கள் எல்லோரும் படுக்கையில் அட்டையாய்க் கிடந்தனர். வாரவிடுமுறை வெள்ளி என்பதாலும், குடித்த போதையில் யாருமே சாப்பிடக்கூட போகலை. எழுந்துபோய் முகம் கழுவி தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். ஏழைகளுக்கும் போதைகளுக்கும் ஒரே தீர்வு.

  பொய் பொய்யா சொல்லி திரும்பவும் சைனாவிலிருந்து அந்த டையை ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன். இருந்தாலும் என் மனம் அடங்கவில்லை, திரும்பவும் தேட ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குப்பைக்கூளமாக்கி வெளியில் எடுத்துப் போட்டேன். ட்ராயரை முழுவதும் வெளியில் எடுத்தவுடன் மடிமேல் வந்து விழுந்தது டை.

  “ங்கோ_” கெட்டவார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை எடுத்துப் பார்த்தேன் அதே டை. நான் நிறைய பேப்பர்களை வைப்பதால் ட்ராயரின் மறுபக்கத்தில் உட்புறமாக விழுந்திருக்கிறது. அடப்பாவமே? இதுக்காடா ஒருவாரமா அட்வைஸ் வாங்கினேன்? அட்வைஸ் பண்ணினதைக்கூட மன்னித்துவிடலாம், ஆனா சரக்கடிச்சிட்டு ஒரு நைட் எல்லாம் அட்வைஸ் பண்ணினான் பாரு!!! ஆஆஆ!

  அடுத்த வியாழன் இரவு ஆபீசில் ஒரு ஹிந்திகார பெண்ணும், அவளின் நண்பர்களும், பிரசாந்தும் பீச்சுக்கு போவதாய் பிளான் பண்ணினார்கள். எல்லோரிடமும் சொல்லிவிட்டு இரவு கிளம்பினான், அந்தப்பெண் அவனை பிக் அப் செய்துகொண்டாள். பிரசாந்த் எப்போ ரூமுக்கு வந்தான் என்றெல்லாம் தெரியவில்லை, காலையில் ரூமில் இருந்தான். நேற்று இரவு என்ன நடந்தது என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ஏன்னா அந்தப் பெண் பற்றி ஏற்கனவே தெரியும், "LET'S ENJOY" என்பது அவள் கொள்கை.



சில குண்டுவெடிப்புகள் சில உண்மைகள்!


  கடந்த சில குண்டுவெடிப்புகளின்போது நாட்டில் நடந்த பிரச்சினைகள் ஒரு அலசல்.


செப், 7, 2011 – டெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு 11 பேர் மரணம், 76 பேர் காயம். 

நாடே 2G ஊழல் அதிர்ச்சியில் இருந்த சமயம். ராஜா, கனிமொழி கைது, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று இந்தியாவே களேபரத்தில் இருந்த சமயம். ஆகஸ்ட் மாதம் 2G ஊழலை எதிர்த்து, வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16 முதல் 12 நாட்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம், மொத்த இந்தியாவும் இதற்கு ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 28-ல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்தத் தொடர் உண்ணாவிரதத்தால் ஆட்சி கவிழும் சூழல் இருந்தது.

ஆகஸ்ட் 1, 2012 -  புனேயில் ஐந்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ( ஐந்து இடங்களிலுமே ஆட்கள் இல்லை )
ஜூலை 29-ல் ஊழலைக் கண்டித்து திரும்பவும் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே. டெல்லியில் பவர்கட், மின்சார மெட்ரோ ரயில் நிறுத்தம் இவை இரண்டும் ஒரு வாரம் நீடித்தது. இதே போல அஸ்ஸாம் கலவரம் ஜூலை 20 முதல் 10 நாட்கள் நீடித்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர். பலர் கொல்லப்பட்டனர்.


பிட்டு படங்களில் ரசிக்க வேண்டியவை!


  படுமொக்கை படங்களைக் கொடுத்திட்டு பீத்திக்கிற நடிகர்/இயக்குனர்கள் மத்தில சமூகத்தை உயர்த்தும் பிட்டு படங்களை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் இருக்கும் நடிகர்/ இயக்குனர்களைக் கவுரவிக்கவே இந்தப் பதிவு.

  • பிட்டு படம் ஆரம்பிச்ச காலத்திலிருந்தே 100 வருசமா அதே கதையை திரும்ப திரும்ப எடுத்தாலும் என் கதை அதை நீ எப்படித் திருடலாம்ன்னு ஒரு பிட்டுபட டைரக்டராச்சும் சொல்லிருக்கானாயா? இல்லே கேஸ்தான் போட்டிருக்கானா? அந்த நன்றி உணர்ச்சி இருக்கா உங்களுக்கெல்லாம்? ஒரு படத்தை காப்பி பண்ணினதுக்குப் போய் டிவில அழுறாங்க, கண்ணீர் விடுறாங்க, கேஸ் போடுறாங்க. இல்ல நான் கேட்குறேன் படத்தை வேறு ஆளை வச்சுதானே எடுத்தான்? உன் படத்தை அப்படியேவாயா ரிலீஸ் பண்ணான்? இதுக்கு போய் கூவிகிட்டு.

  • அதே கதையை 100 வருசமா பார்த்தாலும் ஒரு ரசிகானாச்சும் சலிப்படைச்சிருக்கானா? கிடையாது. 70 வயசாகியும் இன்னும் பார்த்துக்கிட்டுருக்காங்கய்யா சில ரசிகர்கள். ஆனா எதாச்சும் நடிகர் ஒரு படம் பழைய படம் மாதிரி பண்ணாகூட எப்பிடி கழுவி கழுவி ஊத்துறீங்க? இதெல்லாம் மனசை உறுத்தல?


குழந்தை தத்துவங்கள்!


  • ஒரு குழந்தை போதும் உலகை மறக்க, ஒரு குழந்தை போதும் உலகை மறக்காமலிருக்க!

  • அம்மா கைபிடித்து நடக்கும் எந்தக்குழந்தையும் சாலையைக் கவனிப்பதில்லை - அம்மா பார்த்துக்கொள்வாள் என்று அதற்குத் தெரியும்.

  • பிறக்கும்போது எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றோம், பின்னர்தான் இந்தியனாவதும், இந்துவாவதும், முஸ்லிமாவதும்!

  • நாயைக் கூப்பிடுவது "டாமிஜிம்மிமணி". மகனை "டேய் நாயே இங்க வாடா" :-)

  • நீரழகுநிலவழகுமுகமழகு கூடவே உந்தன் மழலை பேரழகு!


காதல் கவிதைகள்!

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 3

என்னை மறக்கடித்தவளே!
என்னை மறந்தாலும்
உன்என்னை மறந்துவிடாதே!

கண்களால் நான் சொல்வது
காதல் காதல் என்றறிந்தும்
உணர்வின்றி உணர்ச்சியின்றி
ஒன்றும் அறியாதவளாய்ப் போகையில்
எப்படிச் சொல்வேன்? – நான்
உன்னைக் காதலிக்கிறேன் என்று.



விஸ்வரூபம் – ஏமாந்தது நானு! அமெரிக்காவே கொதித்தெழு!

 "தராசோட விலை ஐயாயிரமா? அடேய் மோசம் போய்ட்டோமேடா! மோசம் போய்ட்டோமேடா! எவ்வளவு நாளா வியாபாரம் பண்றோம் நம்மள ஏமாத்திட்டானடா!"

 என்னது என் டயலாக்கை எல்லாம் இவன் பேசிட்டு போறான்? என்று முஸ்லிம் தலைவர்களைப் பார்த்து அமெரிக்கா கேட்க வேண்டியது, ஆனா இவங்க முந்திகிட்டாங்க! உதாரணமாய் படத்தில் ஒரு வசனம்

 “நாம அல்லாவுக்காகப் போராடுறோம், அமெரிக்கா ஆயிலுக்காகப் போராடுறது!”  நியாயமா பார்த்தா இந்த வசனத்திற்கு அமெரிக்காவுலதான் தடை பண்ணியிருக்கோணம்! பயலுக அவசரத்துல இங்க பண்ணிட்டாள்!

நிறைய வசனங்களில் கமல் டச்!

 கமலை அடிக்கும்போது “கிருஷ்ணா” னு கத்துகிறார். “நீ முஸ்லிமா இருந்துகிட்டு கிருஷ்ணானு கத்துறே?” என்கிறான் தீவிரவாதி, அதற்கு கமல் “சரி அல்லா” என கத்துகிறார்.

 கமல் மற்றும் அவர் உதவியாளரால் தவறுதலாய் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அப்போது கமல், “நம்மை அல்லா மன்னிக்கவே மாட்டார்.”
அதற்கு உதவியாளர், “நம்மையில்ல; உன்னை!”



காதல் கவிதைகள்!

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 2


அடிக்கடி மவுனங்களால்
மனதை
உறைய வைக்கிறாய்!


அடிக்கடி புன்னகையால்
மனதை
உரசிப் புண்ணாக்குகிறாய்!


நம் மனதின் தேசியகீதமே
மவுனம்தானோ?


தினம் ஒரு பூவைச் சூடுபவளே
என் மனதில் சூடிய
ஒரு பூவே
வாழ்நாள் முழுதும் மனம் வீசிக்கொண்டிருப்பது
உனக்கெப்படித் தெரியும்
அது நீயாய் இருந்தும்?


பேச்சில்லை நீ பேசும்போது
மூச்சில்லை நீ பார்க்கும்போது
நானேயில்லை நீ இல்லாதபோது.