விபத்துகளில் இந்தியா No.1 – தவிர்க்கும் வழிமுறைகள்!

  உலகிலேயே சாலை விபத்துகளில் இந்தியாதான் No.1 - வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 1.05 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்! இதில் பெரும்பாலும் 15-29 வயதுடைய இளைஞர்களே பெரும்பாலும் இறக்கின்றனர்.

  இதற்கு முக்கிய காரணம் பயணம் செய்யும்போது பாதுகாப்பு முறைகளை உபயோகிக்காததும், கேவலமான ரோடுகளும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும், ஸ்பீட் லிமிட்டை பின்பற்றாததும்தான்!.

  இது எல்லாவற்றையும்விட வாகனம் ஓட்டுவதற்கோ லைசென்ஸ் பெறுவதற்கோ பயிற்சி என்பதே கொடுப்பதில்லை இதுதான் அதிமுக்கிய காரணம்


  உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த என் தோழி ஒருவர் இருசக்கர வாகன லைசென்ஸ்க்கு விண்ணப்பித்தார். ஆபீசர் சொந்தக்காரர் என்பதால் அவருக்குக் கிடைத்தது கார் லைசென்ஸ் - பைக்கைக்கூட ஓட்டிக்காட்டாமலே! - இவரெல்லாம் கார் ஓட்டினால் எத்தனை உயிர் போகும்?

இவற்றைத் தவிர்க்க சில ஆலோசனைகள்!


காதல் கவிதைகள்



காதல்
  நகத்தைப் போன்றது
  வெட்ட வெட்ட
  வளரும்!

காதல்
  நகச்சாயம் போன்றது
  கை சேர்ந்தால் மட்டுமே
  பயன்!

காதல்
  கைரேகையைப் போன்றது
  மனதின்
  அழியா ரேகைகள்!

காதல்
  விதிவிலக்கு
  விதிவிலக்குகளை
  உதாரணம் காட்டக்கூடாது..




  நிலாப்பெண்ணுக்கு அப்படின்னு கவிதையா தலைப்பு வைத்துவிட்டு கவிதை போடவில்லையென்று யாரேனும் புகார் செய்வதற்கு முன்னமே கவிதை போட்டுவிடுவோம்! :)


  விதிவிலக்குகளை எப்போதுமே உதாரணம் காட்டக்கூடாது. கவிஞர்களில் தாகூர் விதிவிலக்கு - செல்வந்தராகவே பிறந்து செல்வந்தராகவே வாழ்ந்த ஒரே கவிஞர் தாகூர் மட்டுமே! 



தத்துவங்கள் - ஜோக்ஸ் : மனைவி vs லவ்வர்

  • டாப்சீ-னு பெயர வச்சிக்கிறாங்க! டாப்ல பார்த்தா அடிக்க வர்றாங்க! என்ன உலகமடாநல்லதுக்கு காலமில்லை :( 

  • லவ்வர்கிட்டே பொய்சொல்லி மாட்டிகிட்டா சரணம் - மனைவிக்கு இது தெரிஞ்சுபோச்சுன்னா அப்புறம் உனக்கு மரணம்!

  • "தாலி"ங்கிறது சுருக்கு மாதிரி டைட்டாதான் கட்டனும்! "டை"ங்கிறது பொண்ணு மாதிரி மென்மையாதான் கட்டனும்!

  • போனில் "அப்புறம்" வார்த்தையை அடிக்கடி உபயோகித்தால் எதிர்முனையில் காதலி! "அப்புறம் என்ன?" என்று உபயோகித்தால் எதிர்முனையில் மனைவி

  • பேஸ்புக்ட்விட்டர்ல இருக்கிறவங்க எல்லாம் எப்படி "ரைட்டர்"னு போடலாம்? "டைப்பர்"னுதானே போடணும்? 


எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதா?

  இது கட்டுக் கதையல்ல.  கண்ணீரால் நிறைந்த நிஜம்.நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ராஜீவ் படுகொலை தொடர்பான புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...


  அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.  குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு" என்று 100ரூபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.


   ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும்  ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
காமராஜர் என்றொரு எளிய இதயம் - இறைவனைப்போல்
   அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். 

   முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்" என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.


ஏங்குற மச்சா! சாகுற மச்சா! அவ பார்க்கல மச்சா!

உருகி உருகி காதல் செய்ய!
  உன்னுள் நான் வர என்ன செய்ய?
சிதறிச் சிதறி சிதைந்தேன் நானே!
  பதறிக் கொஞ்சம் எனை ஏற்றால் என்ன?

என்னுள் நீ வந்து எப்படி நுழைந்தாய்?
ஏங்கி ஏங்கி தவிக்க வைத்தாய்!

ஏதோ ஒன்றை இழந்ததுபோல,
என்னை நானே வெறுப்பதுபோல
புரியாமல் தவிக்கிது மனமே!

இப்போ ஏங்குற மச்சா!
நினைச்சு சாகுற மச்சா!
இருந்தும் அவ பார்க்கல மச்சா!

(உருகி உருகி காதல் செய்ய!)

விளக்கெல்லாம் ஏத்த வேணாம்!
வீட்டிற்குள் நீ வந்தா போதும்!
வீடெல்லாம் வெளிச்சம்தானடி!

கண்ணைக்கூட சிமிட்ட வேணாம்,
நீ கண்ணசைச்சா போதும்,
என் கால்கள் ரெண்டும் கதகளி ஆடுமடி!

காதல்கூட சொல்ல வேணாம்,
மனைவியாய் நீ வந்தா போதும்,
வாழ்வெல்லாம் வசந்தம்தானடி!


ஊரே காறிக் காறித் துப்புது! உலகமே கழுவி கழுவி ஊத்துது!




நான் இறப்பதற்குள் தனிஈழம் பெற்றுத் தந்துவிடுவேன்! - மு.க அறிக்கை

ஐயா ஒரு டவுட், "தனிஈழம்"ங்கிறது உங்க பொண்ணு பேரா?








அறிக்கை வெளியிட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று அறிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது.  ஜெ. அறிவிப்பு


இதனால் சகலமான எதிர்கட்சிக்காரர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் யாரும் கு_ விட வேண்டாம்! நாளை கு_ தடுப்புச்சட்டத்தின்கீழ் நீங்கள் கைது செய்யப்படலாம்!



தமிழ் எழுத படிக்க டைப் செய்ய - Tamil Typing software download!

  நிறைய நண்பர்களுக்கு தமிழில் எழுத/டைப் செய்ய எந்த மென்பொருள் உபயோகிப்பது என்பது குழப்பமாக இருக்கலாம்! அதைத் தீர்க்கவே இந்த பதிவு!

 இவைகளை உபயோகித்துப் பார்த்து உங்களுக்கு வேண்டியதை நிறுவிக்கொள்ளலாம்!



1. என்.எச்.எம் எழுதி:

விண்டோஸ் இயங்குதளத்தில் XP, Vista, Windows 7 செயல்படக்கூடியது. டவுன்லோட் செய்து Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். நகல் (Copy/Paste) செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். இது பல ( applications : MS office, notepad, IE explorers and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.

  டைப் செய்ய ஒலிப்பு முறையை (Alt+2) பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்


I LOVE நிலாப்பெண்ணுக்கு!


நிலாப்பெண்ணுக்கு தளத்த்துடன் பயணிக்க -





ANDROID APPLICATION:



  மொபைல் மற்றும் ஐபேடுக்கான அன்ட்ராய்டு அப்ளிகேசன்!





BROWSER ADD-ONS:






Extension Factory Builder




.
NILAPENNUKU BADGE:



<a href="http://www.nilapennukku.com/" title="nilapennukku">
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXEDEkmF53AClTnhwmjZF62o4iM22MNaalxVBUyWvGPeWZ9MdhOse_5mJ4y49tjg6ouBaQ9zCTX-IeeHh3DZutB-OXAmMTuKcIkTD3YMsM0JnjkrcQ0Ws-Zcq2KkGei5Z5Sr2UjQp74VWf/s210/nila%2520badge.JPG" width="210" height="47" border="0" alt="nilapennukku badge"/></a>


  இதை உங்கள் இணையதளம் / வலைப்பதிவில் இணைத்துக்கொள்ளலாம்! பிளாக்கரில் இணைக்க மேலுள்ள CODE - ஐ காப்பி செய்து BLOGGER  -> LAYOUT  -> ADD GADGET -> HTML JAVASCRIPTஇல் பேஸ்ட் செய்து சேமிக்கவும்!


பில்லா 2 திரை விமர்சனம்! - Ajith Billa 2 Movie Review

  ரஜினிக்கு பிறகு ஒரு நடிகரின் படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்குமென்றால் அது அஜித் மட்டும்தான்! ரசிகர்கள் என்பதைவிட "தல" வெறியர்கள் என்பதுதான் பொருத்தமாய் இருக்கும்! படம் ஓடுதோ இல்லையோ என்பது வேறு விஷயம்! எப்படியும் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் கிடைக்காது!


  துபாயில் விசில், ரகளை என அனைத்துமுடன் இந்தியாவில் வெளியாவது போல் ஒரு படம்  வெளியாகிரதென்றால் அது அஜித் படம் மட்டும்தான்! படத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வெளியில் காத்திருந்து - கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம், முக்கியமாக இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் அஜித் ரசிகர்கள் என நினைக்கிறேன்.!
  
கதை:

  பில்லா படத்தின் முன்பாகம்! அதாவது டேவிட் எப்படி பில்லாவாக மாறினார் என்பதே கதை. இலங்கை அகதியாக இந்திய எல்லைக்குள் நுழைவது முதல், சிறுசிறு கடத்தல் தொழில் ஈடுபட ஆரம்பித்து கடைசியில் மிகப்பெரிய டானாக மாறுகிறார். எதிரில் வரும் அனைவரையும் போட்டு தள்ளுகிறார். போலீஸ், ரவுடி, அரசியல்வாதி, மற்ற டான்கள், என எல்லோரையும் குருவி சுடுவதுபோல் சுட்டுத் தள்ளுகிறார். படம் முழுதும் ரத்தம்! ரத்தம்!! ரத்தம்!! அஜித்தின் நடிப்பு நன்றாய் இருக்கிறது.


மனதைத் திற - சின்ன சின்ன சந்தோசங்கள்!

  ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்!

  ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!


  வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்?


  முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி!

  மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்!


  எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு வீட்டில் ஆசையுடன் அருகில் வரும் குழந்தையிடம்கூட முகத்தை உம்ம்ம்என்று காட்டி ஓடவைக்கிறோம்! அலுவலகங்களில் அருகில் வரும் நண்பர்களை நான் பிஸி என்று விரட்டிவிட்டு எங்கோ அயல்நாட்டில் உள்ள நண்பர்களை நலம் விசாரிகிறோம்!


  ஒவ்வொருநாளும் இரவு ஒரு மணிவரை வேலைமுடித்து வீடு வருகிறோம்! அலுவலகத்திற்கு ஒரு நல்ல பணியாளராய் இருக்கிறோம்! ஆனால் மனைவிக்கு? குழந்தைக்கு? அலுவலகங்களுக்கு நீயில்லை என்றால் இன்னொரு ஆள்! ஆனால் உன் மனைவிக்கு? குழந்தைக்கு?


  உதாரணத்திற்கு குடும்பம், மகிழ்ச்சி, தூக்கம், அரட்டை, நண்பர்கள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு 40 வருடங்கள் கடுமையாய் உழைத்து உங்கள் குறிக்கோளை அடைந்துவிடுகிறீர்கள். இப்படி இருபது வயதில் ஓட ஆரம்பிது அறுபதாவது வயதில் சாதனையை இலட்சியத்தை அடைந்துவிட்டோம்!


ஆனால் உன் வாழ்க்கை

இந்த ஒரே ஒரு லட்சியத்திற்காகவா உன் அறுபது ஆண்டுகாலம் வீணடிக்கப்பட்டது?


ஒருவேளை இலட்சியத்தை அடையமுடியவில்லை! அல்லது உங்கள் வாழ்க்கை முன்னமே முடிந்துபோய்விடுகின்றது. (யாருமே இறைவனிடம் உறுதி வாங்கி வரவில்லையே?)



ஜென் கதை!


மிகவும் வயதான ஒரு ஜென் துறவி படுக்கையிலிருந்தார். தன் இறப்பிற்கு முன்னர், தன் சீடர்களை யார் வழிநடத்திச் செல்வது என்று தீர்மானிக்க ஒரு சோதனை வைக்கத் தீர்மானித்தார்.


வயது மூப்பினாலும், நோயாலும் அவரது முகம் கடுமையாக வாடி இருந்தது. அனைத்து சீடர்களையும் அருகே அழைத்தார்.




தத்துவம் ஃபிகர் Vs நண்பன்


  • மண்ணு மேல ஆச வச்சா உனக்கு ஆறடி மண்ணாவது மிஞ்சும்;   ஆனா பொண்ணு மேல ஆச வச்சா உனக்கு அரை இன்ச் பன்னுகூட மிஞ்சாது!

  • ஃபிகர் ஐபோன் மாதிரி கலரா இருந்தாலும் விழுந்தா உடைஞ்சிடும்,   நண்பன் நோக்கியா B&W 1100 மாதிரி தூக்கி வீசினாலும்,  திரும்ப எடுத்துக்கலாம்!

  • ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையுமா? - வளையும்ஐம்பதுக்கு அப்புறம்தான் கூன்போட்டு வளையும்!

  • கல்வி அமைச்சர் கல்வியை கவனிப்பார், போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்தை கவனிப்பார்,  முக்கிய அமைச்சர் முக்குரவங்க எல்லோரையும் கவனிப்பாரா?
இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரிக்கவா முடியும்?  ஊஊஊ!


  • ரோட்ல பெண்கள் விழுந்தா தூக்க நூறுபேர்ஆண்கள் செத்தால்கூட தூக்க நாலுபேர் வர்றதில்லை! 


என் முழுதும் நீ என்கிறேன்; பாதி என்கின்றாயே நீ? - காதல் மொழி 3



முற்றும் இல்லை முதலும் இல்லை எனும் பட்சத்தில் எங்கிருந்து நான் தொடங்க?

முற்றும் இல்லாதவரை எங்குவேண்டுமானாலும் தொடங்கலாம், முதலாய் நானிருக்கும்வரை!

"கதியே நீயென்று சரணம் ஏய்தினேன்" :-)

என் ஆதியும் நீதான், என்னில் பாதியும் நீதானென்று என்னுள் கலக்கவிட்டேன்!

இருவரும் ஒருவரெனக் கலந்தபின் இனி ஒரு பிரிவேது; எனதுயிர் கொஞ்சம் துயில் கொள்ளட்டும் உன்னுள்.

தூக்கம் கலைந்ததோ? அல்லது நான்தான் கலைத்துவிட்டேனோ?

உன்னுள் உறங்கையில் விழித்துக் கொண்ட என் கனவு கலையுமோ உன்னால்? :-)

என்னுள் எதற்கு கனவு காண்கிறாய்? நனவைக் காண்போமே இருவரும்?

நிஜங்கள் இரண்டு காணட்டுமே விழா காணும் கனா ஒன்று :-)

திருவிழா காணும் காலமாய் மாறட்டும்! :)


கத்ரீனாவுடன் கட்டிப்பிடித்து பாட்டு பாட வேண்டுமா?

 இந்த மாதிரி கத்ரீனாவை கட்டிபிடித்து ஒரு சீன் வேணும்னா நமக்கு முதல்ல தேவை ஒரு பாட்டு! அப்புறம் இசை! எல்லாமே ரெடி!

  வழக்கம்போல ஒரு பாட்ட டப்பிங் பண்ணுவோம்! இந்த பாட்டுல வர்ற மாதிரியே பாடனும் சரியா? (இசை : Shankar–Ehsaan–Loy)

                                                       


உடல்ல்ல் உயிரென உறவென கலந்தாய் நீயே!
உயிர்ர்ர் கனவென நினைவென நிறைந்தாய் நீயே!

ஓஹோ! இது இன்னும் தொடரட்டுமே!


கூகுள் ரோபோட் கார் - டிரைவர் இல்லாமல் தானே செல்லும்! Self-Driving Car by Google

  தேடல் உலகின் ஜாம்பவான் கூகுள் சமீப காலமாக ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது – டிரைவர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோட் கார்!
Self Driving Car by Google
  கடந்த மே மாதம் அமெரிக்காவில், கூகுள் ரோபோட் காருக்கான லைசென்ஸ் பெற்று, உலகின் முதல் ரோபோட் கார் என்ற பெருமையைப் பெற்றது.

  இந்த கார் Google Street View தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ராடார் சென்சார் உதவியுடன் தனிப்பட்ட சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது! இதில் நீங்கள் எந்த ஒரு பட்டனைக்கூட தொட வேண்டியதில்லை. ஏறும் இடம் முதல் இறங்கும் இடம் வரை வேடிக்கை பார்ப்பது மட்டுமே உங்கள் வேலை. மற்ற எல்லாவற்றையும் சாப்ட்வேர் பார்த்துக்கொள்ளும்.

  தற்போது வணிக முறையில் வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வணிக 
முறையில் நமக்கு கிடைத்துவிடும்!