தத்துவங்கள் தன்னம்பிக்கை வாழ்க்கை!


  • அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை!

  • பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர எல்லா ஆண்களும் போய்விட வேண்டும் :-)
  
  • வீடு சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலும் பராவாயில்லை, மைக்செட் வைத்து ஆசிர்வதிக்கப்படும் இடத்திற்குப் பக்கத்தில் வேண்டாம்!

  • ஊருக்குள்ள எதைப்பார்த்தாலும் போட்டோ எடுத்து ஸ்டேடஸ் போட்டுர்றானுக. நம்பி உச்சா போக முடியல! சே!

  • குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலும் இருந்து ஒரு பிறந்தநாளை அதிகப்படுத்துங்கள்!


சர் ரவீந்தர ஜடேஜா – SIR RAVINDRA JADEJA


  • சர் ரவீந்தர் ஜடேஜா பேட்டிங் பண்ணும்போது ஸ்டைன் வீசின பந்து பேட்டில படாம அவரு உடம்பில பட்டுடுச்சு. அப்புறம் எங்க தேடியும் அந்த பந்தைக் காணவே இல்லை. பேட்டில பட்டிருந்தாகூட சிக்ஸ்ஸோட போயிருக்கும், சர் உடம்பில பட்டது கிடைக்குமா?


  • சென்னைல நடந்த சென்னை சூப்பர்கிங்க்ஸ் VS பெங்களூர் மேட்ச் முடிஞ்சுட்டு மும்பையோட விளையாட மும்பைக்கு பிளைட்ல போயிட்டிருந்தாங்க. அப்போ டமால்னு ஒரு சத்தம். என்னடான்னு பார்த்தா கிரிக்கெட்பால் விமான இறக்கைல விழுந்திருக்கு. சர் மேட்ச்ல அடிச்ச சிக்ஸர்ல மேலே போன பால் இப்பத்தான் திரும்பியிருக்கு.


தொப்பி தொப்பி


  எப்படி பேசினாலும் கேட் போடுறானுக சிலர். இவிங்ககிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி மான் கராத்தேதான் பிறவு என்ன செய்ய? ஏலே இது சரிதானேனேனு கதைய படிச்சிட்டு சொல்லுவினம்.


  It happened at a New York Airport. This is hilarious. I wish I had the guts of this girl. An award should go to the United Airlines gate agent in New York for being smart and funny, while making her point, when confronted with a passenger who probably deserved to fly as cargo. For all of you out there who have had to deal with an irate customer, this one is for you.

A crowded United Airlines flight was canceled. A single agent was re-booking a long line of inconvenienced travelers.


கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?

  2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.

கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.

ஐந்து ரூபாய்

ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.


நம்பர் 1 முட்டாள் யார்?

 நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.


  ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.


கிரிஸ் கெயிலாக மாறிய ஜெ! அத்தனையும் சிக்ஸர்!


பந்து கமெண்டரி:

  "இலங்கையில் இறுதிப்போரின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், இலங்கையின் நடுவர்கள், களப் பணியாளர்கள் என யாரும் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

எடுக்கப்பட்ட ரன்கள்:

  1. IPL தொடங்கும் இந்த சமயத்தில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை. ஜெ. என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதே போல IPL நிர்வாகம் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என ஒத்துக்கொண்டது. நமக்கு பணந்தான் முக்கியம்! நாய் வித்தகாசு குரைக்கவா போகுது?

  2. சென்னை அணி இரண்டு இலங்கை வீரர்களைப் மொத்த தொடருக்கும் புறக்கணித்தது எதிர்பார்த்ததுதான். அதனால் பெரிய இழப்பில்லை. ஆனால் அணிக்கு ரசிகர் ஆதரவு முக்கியந்தானே? சீனிவாசன் வாயாலயே சீனி விக்கிற ஆளாச்சே?


புல்லரிக்க வைத்த விளம்பரங்கள்!





  விளம்பரம் என்றால் எதோ அந்தகாலத்து தூர்தர்சன் விளம்பரங்களைப் பார்த்து வியந்துகொண்டிருந்த??? (எப்படா முடியும்னு) இப்பொழுதெல்லாம் எப்பொழுது விளம்பரம் வருமென்று தேட ஆரம்பித்து விடுகின்றோம்! கார்பரேட் உலகில் போட்டிகளினால் வந்த நன்மை இதுமட்டும்தான்!