Blogger Widgets

தமிழ் தத்துவங்கள்


  • தமிழ் எண்முறையிலிருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் ஒன்று(ஊ), இரண்டு(ஊ), மூன்று(ஊ) பத்து(ஊ) நூறு(ஊ), எண்ணூறு(ஊ) (1-899 வரை)

  • குழந்தைகளுக்கு அன்னா சொல்லித்தான் தமிழ் மொழி கற்றுத்தருகிறோம் இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா..

  • தமிழ் எழுத்துகளில் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

இதெல்லாம் தெரிந்துதான் பாரதி அன்றே சொன்னார் - "தமிழ் இனி மெல்லச் சாகும்"
ஆனா அதுக்கு அவரையே ஊறுகாயாக்கனுமா?        (படம் நன்றி - ) 

  • இங்கிலீஸ தமிழ்ல எழுதினா தங்கிலீஸ் ஆகும், ஹிந்திய தமிழ்ல எழுதினா தந்தி ஆகுமா?

  • மௌனம், சம்மதம், சந்தேகம், பெருமூச்சு, கேள்வி, கலவி எல்லாவற்றிலும் "ம்"

  • எவனோ பெயரையெல்லாம் சிலர் தன் அப்பனென்று கூறித்திரிகின்றனர் - டாடி


மிக முக்கிய குறிப்பு : இட்லி சொல்லின் பொருள் என்ன தெரியுமா? 
இட்டவி - மாவை இட்டு அவித்தல். பின் அதுவே மருவி இட்டிலி என்றானது.

இந்த இட்டிலியை மற்றவருடனும் பகிருங்கள் :-)


0 COMMENTS:

Post a Comment