Blogger Widgets

முதல் ரவுண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது – தேமுதிக



1. நேரம் இல்லாததால் திருச்சி இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம் -விஜய்காந்த்!

நல்லவேளை உங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்காவது நேரம் கிடைத்ததே!

 

2. ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட்டவட்டம்

அப்படியே ராசா, கனிமொழி, கல்மாடி இவங்க மீதும் விசாரணை நடத்த முடியாதுன்னு சொல்லீட்டிங்கனா நாங்க எங்க வேலையையாவது  பார்ப்போம்!

 

3. ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது -ராசா திடீர் 'அந்தர் பல்டி'- 

சார் நீங்க இதுக்கு முன்னாடி சர்கஸ்ல வேலை செஞ்சீங்களா என்ன?


 


4. ஜெயலலிதாவால் கழட்டிவிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வைகோ, விஜயகாந்த், தா.பாண்டியன் என நீண்டுகொண்டே போகிறது!


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


 


5. எனக்கு கீழ் இருக்கும் தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் அழகிரி ஆவேசம்.


எப்படி நின்னாலும் நீங்க எதோ ஒரு தொகுதியில் மட்டும்தான் உங்க இரண்டு காலையும் வச்சுக்கிட்டு இருப்பீங்க! அப்போ அதைத் தவிர மற்ற எல்லாத்தொகுதியிலும் ஊத்திக்குமா?


 


6. இரண்டு மாத பேச்சுவார்த்தைக்குப் பின் தனியாக போட்டி தா.பாண்டியன் திடீர் அறிவிப்பு.

      உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னாடியும் இவரு பேச்சுவார்த்தை 

      நடத்துவார்னு பார்த்தா திடீர்னு தனித்து போட்டின்னு சொல்லிட்டாரு?

      பேச்சுவார்த்தை நடக்கும்போது, “இன்னுமாடா எங்கள நம்பிட்டு 

      இருக்கீங்கனு யாராவது கேட்டுட்டாங்களா என்ன?”

 

7. இந்திய கம்யுனிஸ்டுடன் முதல் ரவுண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது தேமுதிக.

      மார்க்சிஸ்டுடன் இரண்டு ரவுண்டுல பேச்சுவார்த்தை முடிந்தது, இதுல

  எத்தனையோ?

 

8. மதுரையில் அதிமுகவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக திமுக வேட்பாளரும் மாற்றம்.

நல்லவேளை பிரச்சாரத்தின்போது அதிமுக வேட்பாளர் சென்ற அதே இடத்தில்தான் _______ கழிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் சரி.


0 COMMENTS:

Post a Comment