சமீபத்தில்
என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு. தமிழனுக்கு ஹிந்தி என்பது திணித்தாலும்
வராது என்பது ஊர் அறிந்த விஷயம். இதற்கான காரணங்கள் சில தெய்வங்களையே சாரும். ஆனால்
அந்த தெய்வங்களின் வாரிசு, பேரன், பேத்தி எல்லோரும் எங்கே என்ன படிக்கிறார்கள் என்றும்
எல்லோருக்கும் தெரியும். இவைகள் முடிந்து போன விஷயங்கள். எனவே நடந்த நிகழ்வுக்கு
வருவோம்.
துபையில் இந்த
அலுவலகத்தில் உள்ள அனைவரும் இந்தியர்கள் (வேற பிரச்சினையே வேண்டாமே!). காலையில்
வழக்கம்போல் பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றேன். உள்ளே நுழைந்ததும்
எதிரே வந்த நண்பர் (மராத்தியர்), “கேஷா (எப்படி
இருக்கிறீர்கள்) என ஹிந்தியில் கேட்டார்.
“குட்” என ஆங்கிலத்தில்
பதிலளித்தேன். (நமக்கு பேசும்போது அது ஹிந்தி என்று தெரியும், அவ்வளவுதான்)
“நான்
ஹிந்தியில்தானே கேட்டேன், நீயும் ஹிந்தியில்தானே பதில் சொல்லவேண்டும்
என்றார்.
பதிலேதும் சொல்லாமல் “எப்படி
இருக்கிறீர்கள்?? என தமிழில் கேட்டேன்.
“புரியவில்லை” என்றார்.
“நான்
தமிழில்தானே கேட்டேன், நீயும் தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்???
மொழி
என்பது மற்றவர் புரிந்துகொள்ள மட்டுமே தவிர நீயோ நானோ பேசுவதற்கல்ல! நாம் எந்த
மொழியில் பேசினாலும் மற்றவர் புரிந்துகொள்ளவில்லையனால் அதனால் பிரயோஜனமில்லை’ என்றேன்.
“தேசிய மொழியான
ஹிந்தி தெரியாத நீயெல்லாம் ஒரு இந்தியானா?” என்றார்.