ஒவ்வொருவரும்
ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த
லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு
வாங்குவது, பெரிய
பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்!
ஒரு
நிமிடம் சிந்தித்து பாருங்கள்!
வாழ்வில் இதுவரை எதை
எதை தொலைத்திருக்கிறீர்கள்?
முதலில்
தொலைந்துபோனது மகிழ்ச்சி!
மனிதம்
என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும்.
சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில்
தேடிக்கொண்டிருக்கிறோம்!
எங்கோ
நடந்த பிரச்சினைகளுக்கு வீட்டில் ஆசையுடன் அருகில் வரும் குழந்தையிடம்கூட முகத்தை “உம்ம்ம்” என்று காட்டி
ஓடவைக்கிறோம்! அலுவலகங்களில்
அருகில் வரும் நண்பர்களை நான் பிஸி என்று விரட்டிவிட்டு எங்கோ அயல்நாட்டில் உள்ள
நண்பர்களை நலம் விசாரிகிறோம்!
ஒவ்வொருநாளும்
இரவு ஒரு மணிவரை வேலைமுடித்து வீடு வருகிறோம்! அலுவலகத்திற்கு ஒரு நல்ல பணியாளராய்
இருக்கிறோம்! ஆனால் மனைவிக்கு? குழந்தைக்கு?
அலுவலகங்களுக்கு நீயில்லை என்றால் இன்னொரு
ஆள்! ஆனால் உன் மனைவிக்கு? குழந்தைக்கு?
உதாரணத்திற்கு
குடும்பம், மகிழ்ச்சி, தூக்கம், அரட்டை, நண்பர்கள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு 40 வருடங்கள் கடுமையாய் உழைத்து உங்கள் குறிக்கோளை
அடைந்துவிடுகிறீர்கள். இப்படி இருபது வயதில் ஓட ஆரம்பிது அறுபதாவது வயதில் சாதனையை
இலட்சியத்தை அடைந்துவிட்டோம்!
ஆனால்
உன் வாழ்க்கை?
இந்த ஒரே ஒரு லட்சியத்திற்காகவா உன் அறுபது ஆண்டுகாலம்
வீணடிக்கப்பட்டது?
ஒருவேளை
இலட்சியத்தை அடையமுடியவில்லை! அல்லது உங்கள் வாழ்க்கை முன்னமே
முடிந்துபோய்விடுகின்றது. (யாருமே இறைவனிடம் உறுதி வாங்கி வரவில்லையே?)
ஜென்
கதை!
மிகவும்
வயதான ஒரு ஜென் துறவி படுக்கையிலிருந்தார். தன் இறப்பிற்கு முன்னர், தன் சீடர்களை யார்
வழிநடத்திச் செல்வது என்று தீர்மானிக்க ஒரு சோதனை வைக்கத் தீர்மானித்தார்.
வயது
மூப்பினாலும், நோயாலும் அவரது முகம் கடுமையாக வாடி இருந்தது. அனைத்து
சீடர்களையும் அருகே அழைத்தார்.