சில சம்பவங்களை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு, தானா வரும்! - அதில்
ஒன்றுதான் இது!
முதலிரவு, படுக்கையறை அப்படின்னா என்னான்னு கூட தெரியாத வயசு. சரியா 9th std என நினைக்கிறேன், அப்போல்லாம் அம்புட்டு நல்லவனா இருந்தேன்!
கிளாஸ்ல பர்ஸ்ட் வந்ததால கிளாஸ்ல அட்டன்டன்ஸ் எடுப்பதிலிருந்து எக்ஸாம் பேப்பர் திருத்துவதுவரை
எல்லாம் செய்துகொண்டிருந்தேன்! இதெல்லாம் செஞ்சாத்தான் ரொம்ப நல்லவன்!
பெண்கள் என்றால் அப்பவே ஆகாது. பொண்ணுங்க யாருக்கும் மார்க்
போட மாட்டோம்! அந்தப்பிழை, இந்தப்பிழை, எழுத்துப்பிழை அப்படின்னு போடுற மார்க்ல ஒரு பத்து
மார்க்னாச்சும் குறைச்சாதான் தூக்கம் வரும். (அப்புறம் எப்படி நாம பர்ஸ்ட் வர்றது?)
அப்போல்லாம் கட்டுரை என்றால் போர்ட்டில்தான்(Board) எழுதி போடுவம்! (இப்பவும்
அப்பிடிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன்)
நான் எழுதிப்போட்டுக்கொண்டிருந்த தமிழ் பாடத்திற்கு உண்டான கட்டுரையின்
தலைப்பு - அறிவியலின் வளர்ச்சி! எல்லாமே எழுதியாச்சு, முடிவுரை வந்தாச்சு.
முடிவுரை இதுதான் - இவ்வாறு காலையில் எழுவது முதல், இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து
வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!