Blogger Widgets

அம்மணப் பூக்கள்!

ஆடையின்றி அம்மணத்துடன்
சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களை ரசித்ததுண்டா?

பாய்ந்து வரும் சங்கீதம்
பரவசம் அளித்ததை
நின்று கவனித்ததுண்டா?

தவழ்ந்துவரும் மேகம்
உனக்கேன்றே பொழியும்
மழையில்தான் நனைந்ததுண்டா?

சுற்றியிருக்கும் இயற்கையெல்லாம்
சுற்றமாய் இருப்பதைத்தான்
உணர்ந்ததுண்டா?

எதையும் பார்க்காமல்
எதையும் ரசிக்காமல்
நடைபிணமாய் நீ!


5 COMMENTS:

  1. உங்கள் கவிதைகள் ஒரேசமயத்தில் மகிழ்ச்சியையும் பொறாமையும் உண்டுபண்ணுகின்றன. அருமை!

    And its true that life's biggest joys lies in enjoying small things..

    ReplyDelete
  2. நல்ல கவிதை!!

    //சுற்றியிருக்கும் இயற்கையெல்லாம்
    சுற்றமாய் இருப்பதைத்தான்
    உணர்ந்ததுண்டா?

    எதையும் பார்க்காமல்
    எதையும் ரசிக்காமல்
    நடைபிணமாய் நீ!//

    நானும் அப்படித்தானோ?

    ReplyDelete
  3. ஆடையின்றி அம்மணத்துடன்
    சிரித்துக்கொண்டிருக்கும்
    பூக்களை ரசித்ததுண்டா?

    அழகான முயற்சி..வாழ்த்துகள்;;

    ReplyDelete
  4. தலைப்பும் கவிதையும் அருமை அன்பு !

    ReplyDelete