Blogger Widgets

ஒரு கடிதம் எழுதினேன்!


"நான் உன்னை
நேசிக்கவில்லை,
பாசமாய்த்தான் பழகினேன்"
எடுத்த உடனேயே
கடிதத்தின் தொடக்கம்!

சுவையான நடையினிலே
வசைமொழிகள் பொழிந்திருக்க
இறுதியில்,
"என்றென்றும் தோழி"
அடிக்கோடுடன்.

படித்து முடித்தபின்தான்
கிடைத்தது நிம்மதி,
அருகில் அழுதுகொண்டு
ஆருயிர் நண்பன்!





0 COMMENTS:

Post a Comment