Blogger Widgets

கேவலமான உண்மைகள்!

  1. அத்தியாவசிய தேவையான அரிசியின விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
  1. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

  2. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

  3. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


  4. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


  5. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

  6. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

  7. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

  8. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

  9. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

  10. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!

    - இது நமது முகப்புப் பக்கத்தில் தென்பட்டது, பதிந்தவருக்கு நன்றி!
     (பதிந்தவர் பெயர் தெரியவில்லை - இவனும் பாதிக்கப்பட்டிருக்கான்!)

     இனி நம் மனதை உருத்துபவை!


  11. டெல்லி சென்று ஜனலோக்பாலுக்கு ஆதரவு தரும் நடிகர், அதே நபர் அந்த நடிகரின் ஊருக்கு வந்தால் கண்டுகொள்வதில்லை. கொட்டும் மழையில் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியவர், இப்போ தமிழர்களுக்காக முல்லை பெரியார் பிரச்சினைல ஒரு லட்சம் பேர் ரோட்ல இறங்கி போராடும்போது உதட்டைக்கூட திறக்கவில்லை.


  12. நாட்டின் உள்துறைக்கே பாதுகாப்பனவர் வீட்டில் கொள்ளை போகிறது! உலகையே மறந்து விடுகிறார். இன்று பேசியதை நாளை வாபஸ் பெற்று கொள்வார்.

  1. காந்தி ஜெயிலுக்கு போனப்ப யாரும் பாராட்டு விழா நடத்தவில்லை. இப்ப எதுக்கு ஜெயிலுக்குப் போயி திரும்ப வந்தாலும் ஊர் முழுதும் போஸ்டர், மேளதாளம், வரவேற்பு விழா. அடுத்த முதல்வருன்னு பட்டம்.

  1. நீதிமன்றத்திற்கு போறதிற்கு அரசுப் பணத்தை கோடில செலவு பண்றாங்க. பின் கஜானா காலியாயிடுச்சுன்னு பஸ் டிக்கெட், பால் என எல்லாத்துக்கும் விலை ஏற்றுகிறார்கள்.

  1. செய்தி தொலைக்காட்சிகளில் நாள் முழுவதும் கவர் ஸ்டோரின்னு சொல்லி கவர் பண்ணாத சாமியார்களோட நிர்வாண படத்தைக் காட்டுறாங்க, ஊரெல்லாம் பார்க்கிறது. அவர்களோட பங்கு விலை ஒரே நாளில் 4% அதிகமாகிறது.

  1. மோசடி மோசடின்னு தினமும் ஒரு செய்தி. இன்றைய செய்தியில் நேற்றயதை மறந்து விடுகிறோம்.


0 COMMENTS:

Post a Comment