Blogger Widgets

காதலர் தின காதல் கவிதைகள் -1


·        நான் நிலாவை வெறுக்கிறேன்
உன் பெயரை அபகரித்துக் கொண்டதற்காக!



·        அதிகாலையில் ஒவ்வொரு பூக்களும்
உன் வருகைக்காகக் காத்திருக்கின்றன.
அதில் ஒரு பூ நான்!



·        கண்கள் பேசிக்கொள்ளும்
மௌனத்தின் சப்தத்தில்
மொழிகளின் சப்தம் நின்றுவிடுகிறது.




·         உனது சோம்பல்கூட
உற்சாகம்தான்  எனக்குள்.




·        உன்னை காதலிப்பதற்கு நான் வேண்டும்
உன்னால் காதலிக்கப்படுவதற்கும் நான்தான் வேண்டும்.




0 COMMENTS:

Post a Comment