Blogger Widgets

என் முழுதும் நீ என்கிறேன்; பாதி என்கின்றாயே நீ? - காதல் மொழி 3



முற்றும் இல்லை முதலும் இல்லை எனும் பட்சத்தில் எங்கிருந்து நான் தொடங்க?

முற்றும் இல்லாதவரை எங்குவேண்டுமானாலும் தொடங்கலாம், முதலாய் நானிருக்கும்வரை!

"கதியே நீயென்று சரணம் ஏய்தினேன்" :-)

என் ஆதியும் நீதான், என்னில் பாதியும் நீதானென்று என்னுள் கலக்கவிட்டேன்!

இருவரும் ஒருவரெனக் கலந்தபின் இனி ஒரு பிரிவேது; எனதுயிர் கொஞ்சம் துயில் கொள்ளட்டும் உன்னுள்.

தூக்கம் கலைந்ததோ? அல்லது நான்தான் கலைத்துவிட்டேனோ?

உன்னுள் உறங்கையில் விழித்துக் கொண்ட என் கனவு கலையுமோ உன்னால்? :-)

என்னுள் எதற்கு கனவு காண்கிறாய்? நனவைக் காண்போமே இருவரும்?

நிஜங்கள் இரண்டு காணட்டுமே விழா காணும் கனா ஒன்று :-)

திருவிழா காணும் காலமாய் மாறட்டும்! :)


திருவிழா என்றாலும் தீமிதி என்றாலும் உன் விரல் கோர்க்கும் வேளையில் பெண் இவள் மோட்சம் காண்பாளே!

நீ தீ மிதிக்கிறாய் எனும்போது உன் பாதம் படுமுன்னே வெந்துபோவது நானாகத்தானிருக்கும்!

நீ என்பதில் இருப்பது நானல்லவோ? :-)

நீ என்பதும் நான் என்பதும் நம்மில் இல்லை! :)

நீயென்பதில் நானும் இல்லை. நானென்பதில் நீயும் இல்லை:-)

உன் பதிலில் நான் இல்லாமலிருக்கலாம்; உன் பாதியில் இருப்பது நான்தானே?

என்ன கஞ்சத்தனம் உனக்கு? என் முழுதும் நீ என்கிறேன்; பாதி என்கின்றாயே நீ?

உன்னுள் எப்படி வந்தேனென்று புரியவில்லை இதுவரை! பிறகெப்படிச்சொல்வேன் உன்னுள் நான் ஆதியா? இல்லை மீதியா?


@kokilahkb மற்றும் @nilapennukku


3 COMMENTS: