Blogger Widgets

அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

  உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே!  இன்று நேற்றல்ல எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்போதும் பயன்படும்! இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள், ஆராய்ச்சிகள் வழியாகவும் தமிழ் அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.

  திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய இரயில்களிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர் திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள். தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

  படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான்!

  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி

  விளக்கம்: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில்என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.


Tu aurais tes adorateur, Ô Lune
si tu rayonnais comme le visage de la femme.

Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine

Explanation : If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?


  ஆனால் இந்தியாவில்? திருக்குறள் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் தமிழ்நாட்டில் தமிழ் எழுத/படிக்க எத்தனை பேருக்குத் தெரியும்? தன் அப்பன் யாரென்று தெரியாத இவர்களா இன்னொருவனின் அப்பனைப்பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ளப்போகிறார்கள்?


  ஜெர்மன் தெரியாத ஜெர்மானியர்கள் உண்டா? பிரெஞ்சு தெரியாத பிரெஞ்சு மக்கள் உண்டா? ஏன் ஆங்கிலம் தெரியாத ஆங்கிலேயர்கள் உண்டா? ஆனால் தமிழ் தெரியாத தமிழர்கள் எத்தனை பேர்?

  தற்போதைய சில பெற்றோர்களே கேட்கும் கேள்வி  தமிழ் படித்து எனக்கு/என் மகனுக்கு என்ன லாபம்? ஆங்கிலம் படித்தால் நல்ல வேலையில் வெளிநாட்டில் செட்டில் ஆகலாம். அடேய் பதறுகளா! உங்களுக்கு எல்லாமே வியாபாரம்தான் என்றால்
விபசாரம்கூட வியாபாரம்தான் ஏன் அதைச் செய்யவேண்டியதுதானே? எந்த மொழியையும் கற்க வேண்டியதில்லையே!

  தன் மொழியான குரைத்தலைக் கற்காத எந்த நாயும் கழுதையின் கனைத்தலைக் கற்றுக்கொள்ளமுடியாது - அப்படியே கற்றுக்கொண்டாலும் கழுதையாகிவிடமுடியாது!

நன்றி http://rste.org/


  டிஸ்கி : ஒவ்வொருவருக்கும் ஆங்கில அறிவு தேவை - அதற்குமுன் உங்கள் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம்!


13 COMMENTS:

  1. soranaiketta thamizhrgal kattaayam padikkavendiya padhivu padhivittamaikku nandri
    surendran

    ReplyDelete
  2. //// தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ////

    உண்மை தான்...

    பதிவின் முடிவில்... கோபம் வேண்டாம்... நம்ம ஐயனே சொல்லி உள்ளார் அல்லவா...?

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நானா? கோபமா? ஹா ஹா செம காமெடி!

      Delete
  3. உலகம் அனைத்தும் போற்றும். நம்பள தவிர..

    ReplyDelete
  4. காலை எழுந்தவுடன், தினமும் ஒரு குறளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். நம்மிடம் இருப்பவகளையின் அருமை தெரியாது. அது விட்டுபோனால்தான் அதன் அருமை தெரியும்.

    ReplyDelete
  5. வாழ்க தமிழ் . தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  6. தாய் மொழியைப் போற்றாத தமிழர்களைத்[?] திருத்த இது போன்ற பதிவுகள் உதவும்.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  7. தாய் மொழியைப் போற்றாதவர்களுக்கு இது ஒரு சூடு நண்பரே,,, பதிவு பிடித்திருந்ததால், எனது வலைத்தளத்திலும் பகிர்ந்துவிட்டேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நம் தமிழ் நம் உரிமை :)

      Delete
  8. கருக்குமட்டையால அடிக்காத ஒரு குறைதான்...!

    ReplyDelete