உயிர் கொடுத்த ஜீவன்!
விழிகள் இருந்தும்
பார்க்க
இயலா விழிகள்!
பேச
முடிந்தும்
கேட்க
யாருமில்லாமல்
சுவற்றுடனும், அடுப்புடனும்
மட்டும்
பேசிக்கொள்ளும்
அந்த
வயதான ஜீவன்!
இன்னும்
எத்தனையோ பேர்,
முதியோர் இல்லங்களில்
தம் பெற்றோரை சேர்த்து கனிவுடன்
பார்த்துக்கொண்டிருக்கும் அத்துணை நல்லவோங்களுக்கும் இது சமர்ப்பணம்!
பெற்றோர்
தினத்தில் மட்டும் பாசம் பொழிய அவர்களை சென்று பார்க்கும் அல்லது பெற்றோர் தின வாழ்த்துக்களை
தங்களது status
update செய்துகொள்ளும் உங்களுக்கு ஒரு தகவல் -
நீங்கள் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த அதே நாளில் உங்களுக்கான இடமும் அங்கு
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது
இன்னும்
சிலர் இதைவிட மோசம்! பெற்றோர்களை வீட்டிலிருந்து துரத்திவிடும் நல்லவோங்கள்! இவர்களின்
பெற்றோர் செய்த ஒரே தவறு - இவர்களைப் பெற்றெடுத்ததுதான்!
Tweet |
முதியோர் காப்பகங்களுக்கு பெற்றோர்களைத் துரத்தும் பிள்ளைகளே... இன்று எனக்கு நாளை உனக்கு.
ReplyDeleteபெற்றோரை அனாதைகளாகும் பிள்ளைகள் அவர்கள் மனிதர்களே கிடையாது மிருக குணம் கொண்டவர்கள் இவர்களுக்கும் அதே நிலைதான் வரும் என ஏன் நினைப்பதில்லை????
ReplyDeleteஅம்மாவைத் தேடுகிறேன்
ReplyDeleteஇல்லாத இடத்தில்
காலம் தவறியபின்பு
என் மகளின் முகத்தில் !
:)
Delete