Blogger Widgets

உன்னைக் காதலிக்கவில்லை!


எனக்கு யாரும் குழிவெட்டவில்லை,
எனக்கு நானே
குழி வெட்டிக்கொண்டேன்.

எனக்கு யாரும் வழிகாட்டவில்லை,
நானே சென்று
அதில் விழுந்துவிட்டேன்.

எனக்கு யாரும் பகையில்லை,
எனக்கு நானே பகையானேன்.

என்னை யாரும் ஏமாற்றவில்லை,
என்னைநானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்-
உன்னைக் காதலிக்கவில்லை என்று!

                                 - நிலவன்பன்.


எனக்கு யாரும் தடையில்லை.
நானே எனக்கு 
தடை போட்டுக்கொண்டிருக்கிறேன்.

என்னை யாரும் கேட்கவில்லை - நானேதான்
அவளை கேட்காமல் இருக்கிறேன்.

எனக்கு யாரும் சொல்லவில்லை.
அவளும் இப்படித்தான்
தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் என்று!

                                 தீபிகா (http://theepikatamil.blogspot.com/)




0 COMMENTS:

Post a Comment