Blogger Widgets

எங்கள் ஊர் எம்.எல்.ஏ-விற்கு ஓர் கடிதம்


நேற்று
பாலம் கட்டினீர்
இன்று பள்ளத்தில்
வந்த வெள்ளத்தில்
பாலம் சென்றுவிட்டது.

ரோடு போட்டீர்
அது மழையில் கரைந்துவிட்டது!

பத்திரிக்கையாளர்கள் முட்டாள்கள்
உங்களைத் தவறாகப் பிரசுரிக்கிறார்கள்!
மழை பெய்வதற்கெல்லாம் நீங்களா காரணம்?

உங்களைப் பார்த்து
மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது
காணவில்லையென்று
விளம்பரம் கொடுக்கலாமென்றாலும்
புகைப்படம் கைவசமில்லை
முகமும் ஞாபகமில்லை.

காணவில்லையென்று
புகார் செய்யாலாமென்றாலும்
காவல்துறையும் தேடிக்கொண்டிருக்கிறதாம்
பதின்மூன்று வழக்குகளுக்காக.

அது என்னவோ தெரியவில்லை
எங்களுக்கு மட்டும்
ஒரு மனிதரைத் தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை!

காந்தி மட்டும்
மறுபிறவி எடுத்திருந்தால்
பிறந்த உடனே
மூச்சடக்கி செத்திருப்பார்,
தேவையில்லாமல்
கோடி உயிர்களைக்
கொடுத்தோமே என்பதற்காக!


0 COMMENTS:

Post a Comment