Blogger Widgets

காதலர் தினம் காதல் கவிதைகள் -3

தினம் தினம்
என்னை வதைப்பதைவிட
ஒரே அடியாய்ப் புதைத்துவிடேன் - உன் இதயத்திற்குள்!



உன்னை சந்திக்காத ஒவ்வொரு பொழுதும் இழந்துபோன பொழுதுகள்
உன்னை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் என்னை இழக்கும் பொழுதுகள்!




நான் எழுத நினைக்கின்ற
ஒரே கவிதையை
ஏற்கனவே இருவர் சேர்ந்து எழுதிவிட்டனர்
உன் பெயரில்!


உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை
இவ்வளவு நேரம் சிந்திப்பேன் என்றும் நினைக்கவில்லை!



0 COMMENTS:

Post a Comment